இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..எந்தெந்த மாவட்டங்கள்..? | Thoothukudi Rain | School Leave

x

வெள்ள பாதிப்பு தொடரும் நிலையில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடுமுறை நாளை ஈடுசெய்ய வரும் சனிக்கிழமை வேலை நாளாக அனுசரிக்கப்படும் எனவும் தூத்துக்குடி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்