இரண்டே 2 மாணவிகள் படிக்கும் அரசுப்பள்ளிக்கு ரூ.25 லட்சமா? - வாயடைத்து போன மக்கள்..!

x

2 மாணவிகள் படிக்கும் அரசுப்பள்ளிக்கு 25 லட்ச ரூபாய் செலவில் கூடுதல் கட்டடம் கட்டும் பணி துவங்கியுள்ளதால் மக்களின் வரிப்பணம் வீணாவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்... நீலகிரி மாவட்டம் காவயல் பகுதியில், அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தற்போது 3 மற்றும் 4 ம் வகுப்புகளில், தலா ஒரு மாணவி வீதம், 2 மாணவிகள் படித்து வருகின்றனர். 2 வகுப்பறைகள் நல்ல நிலையிலிருந்த நிலையில், 1 வகுப்பறையை இடித்து விட்டு, அங்கு கூடலூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் 25 லட்ச ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது... நல்ல நிலையிலிருந்த கட்டடம் இடிக்கப்பட்டதால் மக்களின் வரிப்பணம் வீணாவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்