பள்ளி மாணவி பலாத்கார வழக்கு - அதிமுக பிரமுகருக்கு பிடிவாரண்டு

x

பரமக்குடி பள்ளி மாணவி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், அதிமுக பிரமுகருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து, ராமநாதபுரம் மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் எட்டாம் வகுப்பு மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், அதிமுக பிரமுகர் சிகாமணி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், சிகாமணிக்கு வழங்கப்பட்டிருந்த நிபந்தனை ஜாமினை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, அவர் சரணடைய ஆணையிட்டது. ஆனால் சிகாமணி சரண் அடையாததால், அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ராமநாதபுரம் மகிளா நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்