"சவுக்கு சங்கர் உட்பட தமிழ் யூடியுபர்ஸ் மீது புகார்" | Youtubers | Complaint

x

மலேஷியா நாட்டைச் சேர்ந்தவர் அப்துல் மாலிக். தொழிலதிபர் மற்றும் சினிமா தயாரிப்பாளரான இவர், மலேசிய நாட்டின் உயரிய விருதான "டத்தோ" மற்றும் சர்வதேச அளவில் தொழில் முனைவோர் விருதையும் பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்துல் மாலிக்கின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில யூடியுப் சேனல்கள் உண்மைக்கு புறம்பாக செய்தி வெளியிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்குடன் அப்துல்மாலிக்கை தொடர்பு படுத்தி சில தமிழ் யூடியுப் சேனல்கள் செய்தி வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து சென்னை காவலர் ஆணையகரத்தில் புகாரளித்த அப்துல் மாலிக் தரப்பு வழக்கறிஞர்கள், தமிழ் யூடியுபர்களான சவுக்கு சங்கர் உள்ளிட்ட சிலர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்ககோரி வலியுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்