பெரியார் பல்கலை. முறைகேடு விவகாரம்.."இன்னைக்கு ஒரு நாள் தான் டைம்.இல்லனா தொடர் போராட்டம் நடக்கும்.."

x

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளரும், கணினி அறிவியல் துறை தலைவருமான தங்கவேல் உள்ளிட்டோர் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக, பதிவாளர் தங்கவேலை சஸ்பெண்ட் செய்ய பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு உயர்க்கல்வி துறை செயலாளர் கடிதம் மூலம் உத்தரவிட்டிருந்தார். ஆனால் இதுவரை தங்கவேல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், 12 நாட்கள் மருத்துவ விடுப்பு முடிந்து, பதிவாளர் தங்கவேல், மீண்டும் பணியில் சேர்ந்தார். இன்னும் 3 நாட்களில் தங்கவேல் பணி ஓய்வு பெற உள்ள நிலையில், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகந்நாதன் அவரை பணி இடை நீக்கம் செய்ய மருத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தங்கவேல் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு இன்றைக்குள் சிறப்பு ஆணை வெளியிட வேண்டும் என்றும், இல்லையென்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் எனவும் ஆசிரியர் மற்றும் பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்