போதையில் சென்ற வடமாநில இளைஞர்..சுத்து போட்டு வெளுத்தெடுத்த மக்கள் - நொடியில் பரபரப்பான சேலம்

x

சேலம் மேட்டூரில், குழந்தை கடத்த வந்தவர் எனக் கருதி வடமாநில தொழிலாளி ஒருவரை பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேட்டூர், கூலி லைன் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், மதுபோதையில் சென்று கொண்டிருந்த வடமாநில இளைஞரை, குழந்தை கடத்த வந்தவர் என எண்ணி பொதுமக்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. விசாரணையில், தாக்குதலுக்குள்ளான நபர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வருவது தெரியவர, அவரை பொதுமக்களிடம் இருந்து மீட்ட போலீசார், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகளை நம்பி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் பொதுமக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கையும் விடுத்துச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்