அசிங்கமாக பேசிய ரூட் தல பாய்ஸ்..தட்டிக்கேட்ட நடத்துனர்..சரமாரிய தாக்கி படுக்கவிட்ட மாணவர்கள்

x

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்ற அரசுப்பேருந்தில், கல்லூரி மாணவர்கள் சிலர் தகாத வார்த்தைகளால் சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இதனை பேருந்து நடத்துநர் பக்கிரிசாமி தட்டிக்கேட்ட நிலையில், ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவர்கள், நடத்துநரை கீழே தள்ளிவிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நடத்துநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தப்பியோடிய மாணவர்களை வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்