டீக்கடையில் ரூ.5000 பாக்கி.. கடைக்காரர் செய்த காரியம் - அரண்டு போய் பாக்கியை அடைத்த போலீசார்

x

கள்ளக்குறிச்சியில் டீ கடையில் 5 ஆயிரம் ரூபாய் பாக்கி வைத்த காவலர்களால் மேல் அதிகாரிகளுக்கு புகாரளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்வராயன்மலை கரியலூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் அங்குள்ள ஒரு டீக்கடையில் தினசரி டீ அருந்தியுள்ளனர். ஆனால் அதற்கு பணம் தரவில்லை எனவும், 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கடன் வந்து விட்டதாகவும் தெரிகிறது. இதுகுறித்து மேலதிகாரிகளுக்கும், முதல்வர் தனிப்பிரிவுக்கும், ஆட்சியருக்கும் புகார்கள் சென்றுள்ளன. விசாரணை நடத்தப்பட்ட நிலையில், உண்மையில் டீக்கடைக்காரர் தான் புகார் மனு கொடுத்தாரா அல்லது போலீசாருக்குள் இருந்து உட்பூசல் காரணமாக அவர்களில் யாரேனும் புகார் தந்தனரா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் டீக்கடை பாக்கியை காவல்துறையினர் செலுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்