இது மட்டும் பண்ணாதீங்க..பண்ணா ரூ.500/- பைன் Confirm..சுகாதாரத்துறை போட்ட கண்டிஷன் | Tamilnadu

x

இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மழை காரணமாக, டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருவதாக குறிப்பிட்டுள்ளார். அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், தங்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டால், சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இல்லாவிட்டால் அவர்களுக்கு உரிய விதிகளின்படி அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார். அதே போன்று கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் செயல்படும் பொதுமக்கள், நிறுவனங்கள், கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். விதிமீறலின் தன்மையை பொருத்து அவர்களுக்கு 500 ரூபாய் வரை, ஒவ்வொரு முறையும் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்