சோறு போட்ட முதலாளிக்கு ரூ.7 கோடி ஆப்பு வைத்த ஊழியர்கள் | Pollachi | Gold Theft

x

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், 7 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை, நூதன முறையில் திருடிய கடையின் மேலாளர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி கடைவீதி பகுதியில் செயல்பட்டு வரும் பிரபு என்பவருக்கு சொந்தமான நகைக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மேலாளராக விக்னேஷ் என்பவரும், ஊழியராக அழகரசன் என்பவரும் பணியாற்றி வந்தனர். வாடிக்கையாளர்களுக்கு நகை விற்பனை செய்யும் போது, கடையின் உரிமையாளர் பிரபுவிற்கு தெரியாமல், கொஞ்சம் கொஞ்சமாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை திருடியது தெரியவந்தது. இதுதொடர்பாக அளித்த புகரின் பேரில், விக்னேஷ் மற்றும் அழகரசனை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான 39 சவரன் தங்க நகை, ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள், சொகுசு கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்