மதுபாட்டிலுக்கு கூடுதலாக 5 ரூபாய் வசூல் - இணையத்தில் பரவும் வீடியோ

x

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக 5 ரூபாய் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து மதுபிரியர் ஒருவர் டாஸ்மாக் விற்பனையாளரிடம் தட்டிக்கேட்டார். மேலும், கூடுதலாக பணம் யார் வாங்க சொன்னது என மதுபிரியர் கேள்வி கேட்டார். அதற்கு, நான் தான் பாட்டிலுக்கு 5 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாக விற்பனையாளர் பதிலளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்