கண்ணிமைக்கும் நேரத்தில் களவு... ஜூட்விட்ட திருடன்... 24 மணி நேரத்தில் பிடித்த ரயில்வே போலீசார்

x

ரயில் நிலையத்தில் காணாமல் போன இருபதரை சவரன் நகைகள் அடங்கிய பையைத் திருடிய திருடன் கைது செய்யப்பட்டார்... பெங்களூரைச் சேர்ந்த அல்பி செரில் காட்பாடி வரை பிருந்தாவன் விரைவு ரயிலில் பயணித்துள்ளார். ரயில் நிலையத்தின் 2வது நடைமேடையில் இறங்கி மின் தூக்கி அருகே காத்திருந்த போது அவரது நகைப் பையை யாரோ திருடியுள்ளனர்... காட்பாடி ரயில்வே இருப்பு பாதை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நகைகளைத் திருடியது வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் என்கிற சசிகுமார் என்பது தெரிய வந்தது... அவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 8 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டன... 24 மணி நேரத்திற்குள் திருடனைக் கண்டுபிடித்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்