காதலியோடு அடிக்கடி வெளியூர் ரைடு.. "எப்பவும் எல்லையில்லா சந்தோஷம்..!" - பட்டதாரி செய்த பகீர் தொழில்

x

குமரி மாவட்டம், இரணியல் பகுதியில் மதுவிலக்குபிரிவு போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது, சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த 3 இளைகளை பிடித்து விசாரணை நடத்தினர். முன்னுக்குப்பின் பின் முரனாக பேசிய அவர்களிடம் சோதனை நடத்தியதில் ஒன்றரை கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், அவர்கள் கட்டிமாங்கோடு பகுதியை சேர்ந்த சகாய சுகின், சிவசங்கர், அவர்களின் நண்பரான நாகர்கோவிலைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி விஷ்ணுகுமார் என்பது தெரியவந்தது. மூவரும் வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து கன்னியாகுமரியில் விற்பனை செய்து, அதில் கிடைத்த வருமானத்தை வைத்து விலை உயர்ந்த பைக்குகளில், காதலியுடன் கோவா, ஊட்டி போன்ற இடங்களுக்கு சென்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து, மூன்று பேரிடம் இருந்தும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்