குடியரசு தின விழாவில் மோப்ப நாய்கள் செய்த சாகசங்கள்...சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த சுவாரஸ்யம்

x

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமநீதி கண்ட சோழன் சிலை அருகில் நடந்த குடியரசு தின விழாவில், தலைமை நீதிபதி கங்கபூர்வாலா, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்து, தேசிய கொடி ஏற்றி வைத்து மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர்,சென்னை உயர் நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் பணி காலத்தை நிறைவு செய்த நீதிமன்ற ஊழியர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் பல்வேறு சாகசங்கள் செய்து அசத்தினர். மோப்ப நாய்களின் சாகசங்கள் அனைவரையும் கவர்ந்தன.


Next Story

மேலும் செய்திகள்