அரசாணை 149 ரத்து? - அமைச்சர் அதிரடி

x

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றப்படும் என, ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி அளித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறக்கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இந்த சட்டம் கொண்டுவரப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆசிரியர் தகுதி தேர்வுக்கு பிறகு மற்றொரு போட்டி தேர்வு நடத்த வழிவகை செய்யும் அரசாணை 149 ரத்து செய்யப்படும், நவம்பர் ஒன்றாம் தேதி முதல் எமிஸ் இணையதள பணிகளில் இருந்து ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அமைச்சர் ஏற்று கொண்டிருப்பதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்