"ரெண்டே திருப்பு... உடைந்த லாக்"வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர்! வெளியான அதிர்ச்சி சிசிடிவி கட்சிகள்

x

உசிலம்பட்டியில் கடையின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை இரண்டு பேர் திருடும் காட்சி வெளியாகியுள்ளது. சிபி என்பவர் தனது கடையின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, மாடியில் உள்ள கடையிலேயே தூங்கியுள்ளார். காலையில் எழுந்து பார்த்த போது, இருசக்கர வாகனம் இல்லாத‌தால், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தார். அப்போது, 2 பேர் இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்த‌து. இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்த‌தை அடுத்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்