வேகமாக பரவும் "ராட்சத காய்ச்சல்" - பீதியில் பொதுமக்கள்

x

ஆவடியில் ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆவடி மாநகராட்சி பகுதியில் கொசு தொல்லையால் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. திருமுல்லைவாயல் திருவள்ளுவர் நகரை சேர்ந்த ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு மூன்று நாட்களாக காய்ச்சல் இருந்த நிலையில், அது டெங்கு பாதிப்பு என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து நிலையில், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்