கணவன் கையை அறுத்த திருடர்களுடன்... துளியும் அஞ்சாமல் போராடிய பெண் அதிர வைக்கும் பரபரப்பு காட்சி

x

பெண் ஒருவர் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை, மர்மநபர்கள் பறிக்க முயன்று தப்பிச்செல்லும் சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வள்ளலார் நகரில் நடந்த இந்த சம்பவத்தில், ரூபாவதி என்ற பெண் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகைகளை இருவர் பறிக்க முயன்றுள்ளனர். இதில், அவர்களை பெண்ணின் கணவர் துரத்தி சென்று பிடிக்க முயன்ற போது, அவரின் கைகளை கொள்ளையர்கள் கத்தியால் அறுத்த சம்பவம் அதிர்ச்சியடைய செய்தது. பெண்ணின் கணவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வரும் போலீசார், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்