"மருத்துவர் எங்கே சென்றார்?"... கேள்விகளால் துளைத்தெடுத்த கலெக்டர்

x

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருக்க வேண்டிய மருத்துவர் இல்லாததால் ராணிப்பேட்டை ஆட்சியர் வளர்மதி கடுமையாக சாடினார். உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆட்சியர் வளர்மதி, அரக்கோணம் அடுத்த செம்பேடு ஊராட்சியில் குருவராஜப்பேட்டை கிராமத்தில் ஆய்வு நடத்தினார். குருவராஜபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற அவர், மருத்துவரைத் தேடினார். ஆனால் ஃபார்மசிஸ்ட் மட்டுமே இருந்த நிலையில் மருத்துவர் எங்கே என்று கேள்வி எழுப்பினார். மருத்துவர் முகாமிற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், 12 மணி வரை புறநோயாளிகள் பிரிவில் இருக்க வேண்டிய நேரத்தில் அவர் ஏன் அங்கு சென்றார் என கடிந்து கொண்டார். தொடர்ந்து ஆரம்ப சுகாதாரத்தில் ஆய்வு செய்து, அங்கு வந்திருந்த நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.


Next Story

மேலும் செய்திகள்