ராமேஸ்வரம் கடலுக்குள் தங்கம்... வெளியான ரகசிய தகவல்

x

இலங்கையில் இருந்து சுமார் 10 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகளை, படகு மூலம் 3 பேர் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, மண்டபம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகளை, மணலி தீவில் தூக்கி வீசப்பட்டதாக கூறியதை அடுத்து, ஸ்கூபா வீரர்கள் மற்றும் முத்துக்குளிக்கும் நபர்கள் உதவியுடன் தங்கக் கட்டிகளை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்