“எப்படியாவது அவரை மீட்டு தாங்களேன்..“ விடுவிக்கப்பட்ட முதியவர் கதறல்

x

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்... ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 64 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த நிலையில், 2வது முறையாக எல்லை தாண்டி வந்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட முருகன் என்ற மீனவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது... மீதமுள்ள மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஏற்கனவே 42 மீனவர்கள் சென்னை திரும்பிய நிலையில், மீதமுள்ள 21 மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர். பா.ஜ.க. சார்பில் அவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது... மீன்வளத் துறை அதிகாரிகள் மீனவா்கள் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்தனர்... தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மீனவர்கள், சிறையில் தாங்கள் அனுபவித்த இன்னல்களை எடுத்துரைத்தனர்...


Next Story

மேலும் செய்திகள்