குவைத் நாட்டில் மீன் பிடிக்கசென்ற தமிழக மீனவர்கள் - பொய் வழக்கில் சிறையில் அடைப்பு

x

குவைத் நாட்டில் மீன் பிடிக்கச் சென்று பொய்யான போதைப் பொருள் வழக்கில் சிக்க வைக்கப்பட்டு சிறையில் உள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் மீட்டுத்தரக்கோரி, குடும்பத்தினர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பாலைக்குடி, மோர்பண்ணை, பாசிப்பட்டினம் கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கார்த்திக், சேசு, சந்துரு, மற்றும் வினோத் ஆகிய நான்கு பேரும் குவைத் நாட்டிற்கு மீன்பிடி கூலியாக சென்று இருந்தனர். அவர்கள் சென்ற படகில் மற்றொருவர் போதை பொருள் கடத்திய நிலையில், இவர்களையும் அந்த வழக்கில் கைது செய்து குவைத் சிறையில் விசாரணை கைதிகளாக அடைத்துள்ளனர். அவர்களை விடுவித்து நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்