இரு பிரிவினரிடையே மோதல் -நள்ளிரவில் வெடித்த போராட்டம் -கதறும் பொதுமக்கள் ராமநாதபுரம் அருகே பரபரப்பு

x

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தகராறில் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி போராட்டம் நடைபெற்றது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது கடுகுசந்தை சத்திரம் கிராமத்தில் இரு பிரிவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், மற்றொரு பிரிவு மக்கள் வசிக்கும் இடத்திற்கு சென்ற கும்பல், அப்பகுதி பெண்கள் உள்பட 7 பேரை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்