ஓட்டு போடும்போது உயிரிழந்த பெண்... பரபரப்பாகிய வாக்குச்சாவடி - தவிக்கும் பெண் குழந்தைகள்

x

இராமநாதபுரம் மாவட்டம் வேதாளை அருகே வாக்கு செலுத்தும் போது மயங்கி விழுந்து பெண் உயிரிழந்த நிலையில், அரசு உதவி செய்ய வேண்டுமென பெண்ணின் மாமியார் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். குஞ்சாரவலசை வாக்குச்சாவடியில் பூத் சிலிப் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த சாந்தி, வாக்கு செலுத்தும் போது மயங்கி விழுந்து நேற்று உயிரிழந்தார். இந்நிலையில், அரசு சார்பில் உதவக்கோரி சாந்தியின் உறவினர்கள், ஆட்சியரிடம் மனு அளிக்க சென்றனர். அப்போது பேசிய சாந்தியின் மாமியார் முருகம்மாள், தனது மகன் உயிரிழந்த பின் மருமகள் குடும்பத்தை கவனித்து வந்ததாகவும், தற்போது அவரும் உயிரிழந்ததால் 2 பெண் குழந்தைகளுடன் தவித்து வருவதாகவும் வேதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்