திடீர் ட்விஸ்ட் கொடுத்து ராமநாதபுரத்தை பதம் பார்த்த கனமழை

x

இராமநாதபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான புதிய பேருந்து நிலையம், அரண்மனை உள்ளிட்ட பகுதிகளில், அரை மணி நேரமாக காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக, அரண்மனை பஜார் மார்க்கெட் பகுதியில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியது. ஒரு சில கடைகளுக்குள்ளும் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் கடும் அவதியடைந்தனர். ஒரு பகுதியில் மட்டும் சாலை போடப்பட்டு, மறுபகுதியில் போடாமல் இருப்பதாலேயே தண்ணீர் தேங்கியுள்ளதாக கூறும் பொதுமக்கள், மீதி பகுதிகளிலும் உடனே சாலை அமைக்க வேண்டுமென, நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்