திடீர் திடீரென காணாமல் போன 160 உயிர்கள்.. சிக்கிய 3 ஆசாமிகள்

x

காரேந்தல் கிராமத்தில் அரியமுத்து என்பவர் ஆட்டுக்கிடை போட்டு நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், அவரது ஆட்டுக்கிடையில் இருந்து 160 ஆடுகள் மாயமானது அவருக்கு தெரிய வந்தது. இது குறித்து இராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், அதே ஆட்டுக் கிடையில் வேலை பார்த்து வந்த லட்சுமணன், சங்கர் ஆகியோர் ஆடுகளை திருடி இளையராஜா என்பவரிடம் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து, 3 பேரை கைது செய்த போலீசார், முதற்கட்டமாக அவர்களிடம் இருந்து 30 ஆடுகளை மீட்டு ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், அந்த ஆடுகளை உரிமையாளர் அரியமுத்துவிடம் ஒப்படைத்தனர்..


Next Story

மேலும் செய்திகள்