மீண்டும் சென்னையை மிரட்டி விட்ட மழை.. திணறிய ECR... மக்கள் அவதி

x

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. கேளம்பாக்கம், மாம்பாக்கம், முட்டுக்காடு, நாவலூர், திருப்போரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், காலை முதல் கருமேகம் சூழ்ந்து லேசான சாரல் மழை பெய்தது. தொடர்ந்து, பிற்பகல் வேளையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக, கனமழை பெய்தது. இதனால், பொதுமக்கள், பணிக்குச் செல்வோர் மழையில் நினைத்தபடி சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்