5 மணி நேரமாக பெய்யும் மழை - பொதுமக்கள் வைத்த முக்கிய கோரிக்கை

x

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே

5 மணி நேரத்திற்கும் அதிகமாக மழை பெய்ததால் குளங்களில் நீர் நிரம்பி வழிந்தது. திண்டுக்கல், வேடசந்தூர், ஆத்தூர், சின்னாளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. ம​ழைநீர் தேங்கிய நிலையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி மேயர் பார்வையிட்டனர். கிராமப்புற பகுதிகளில் பல்வேறு குளங்களில் நீர் நிரம்பியது. ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், பொன்னிமாந்துறை ஊராட்சி உள்ள ஆலங்குளத்தில் கழிவு நீருடன் குளத்து நீரும் மறுகால் பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்