ஒரே நாளில் தமிழகத்தை குளிர்வித்த மழை..!

x

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மித முதல் கனமழை கொட்டித்தீர்த்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. பண்ணப்பள்ளி, கடவரப்பள்ளி, காரக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கனமழை கொட்டித் தீர்த்தது. நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மிதமான மழை பெய்தது. 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கரூர் மாவட்டம் புகலூர், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்