ரயில்வே ஒப்பந்த ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

x

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையில், ரயில்வே ஒப்பந்த ஊழியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கரும்பு குப்பம் கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்பவருக்கும், சிறுபுழல் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் இடையே, கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தினேஷ், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு காரணம் மனைவியும், அவரது உறவினரும் தான் என இறப்பதற்கு முன்பு தினேஷ் பதிவிட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்