விபத்தால் திருடர்களுக்கு தேடி வந்த ஆப்பு - வசமாக வலையில் சிக்கிய சம்பவம்

x

கட்டியாவயல் பகுதியை சேர்ந்த கலைவாணி என்பவர், தனது தந்தை பழனியப்பனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கட்டியா வயல் என்னும் இடத்தில் அவர்களை பின்தொடர்ந்து வந்த 2 பேர், கலைவாணியின் கழுத்தில் இருந்த 7 சவரன் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கொள்ளையர்களின் இருசக்கர வாகனம், கீரனூர் அருகே குளத்தூரில் விபத்தில் சிக்கியது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், இருவரையும் பிடித்து விசாரித்ததில், செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, அவர்களிடம் இருந்து 7 சவரன் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்த போலீசார், காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்