புதுவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. பாமக தலைவர் வலியுறுத்தல்

x

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், புதுச்சேரி சம்பவம் பேரதிர்ச்சியை அளிப்பதாகவும் பிஞ்சு உள்ளத்துக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமையை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். சிறுமியைக் கண்டுபிடிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இந்தக் கொடுமைக்கு காவல்துறைதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். புதுவை முழுவதும் கஞ்சா பயன்பாடு தலைவிரித்தாடுவதாகக் கூறியுள்ள அன்புமணி ராமதாஸ், புதுவையில் பல இடங்களில் குற்றச்சம்பவங்களுக்கு கஞ்சா தான் முதன்மைக் காரணமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்