"5 தடவ போனால் லிப்ட் நின்னு போய்டுது.. உள்ள திருடன் வாரான்.. எதுவுமே சரி இல்ல.." - முக்கிய சாலையை ரவுண்டு கட்டிய மக்கள்

x

சரியாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை எனக் கூறி, சென்னை திருமங்கலத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை திருமங்கலம், 90-ஆவது வார்டில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பிற்கு 2 மாதங்களாக சரியாக குடிநீர் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பல முறை கோரிக்கை விடுத்தும் குடிநீர் வராததால், பொதுமக்கள் காலி குடங்களுடன் அம்பத்தூர் செல்லும் பிரதான சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தியதை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்