கட்டுப்பாட்டை இழந்து திடீரென பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் நிறுவன பேருந்து

x

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே, தனியார் நிறுவன பேருந்து விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை கிராமத்திலிருந்து ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வந்த பேருந்து, செய்யாறு அடுத்த கொடையம்பாக்கம் கிராமத்தில், அதிகாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் பேருந்தை ஓட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்