தனியார் பேருந்து மோதி கல்லூரி மாணவர் பலி.. சாலை மறியல் செய்த உறவினர்கள் -நெல்லை அருகே பரபரப்பு

x

நெல்லை அருகே, தனியார் பேருந்து மோதி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவத்தில், நிவாரணம் கேட்டு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அம்பை அருகே உள்ள இடைகால் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்ற இளைஞர், கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். ஆனந்த் வயலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, தனியார் பேருந்து ஆனந்தின் பின்னால் மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேய பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இறந்த கல்லூரி மாணவர் குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இடைகால் விளக்கு பகுதியில் உறவினர்கள் உட்பட 100 -க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்