முதல் நாள் சிரித்து பேசிய கர்ப்பிணி...மறுநாள் தாயும்.. வயிற்றிலேயே இறந்த சிசு - "மருத்துவமனையின் அலட்சியம்" - போராட்டத்தில் குதித்த உறவினர்கள்

x

அபிஷேகப்பாக்கத்தைச் சேர்ந்த தீபா என்ற 24 வயது பெண் செவிலியராக பணியாற்றி வந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த 1ம் தேதி வலி அதிகமானதால் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. கர்ப்பப்பை பிரச்சினை இருக்கதாகக் கூறிய மருத்துவர்கள் தீபாவிற்கு சிகிச்சை அளித்துள்ளனர்... இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தீபாவும் வயிற்றில் உள்ள குழந்தையும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் காவலாளி மூலமாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த தீபாவின் உறவினர்கள், இரவு வரை தங்களிடம் நன்றாக பேசி கொண்டிருந்த தீபாவிற்கு கொடுக்கப்பட்ட தவறான மருந்தால் தான் அவர் இறந்து விட்டதாகக் கூறி தலைமை மருத்துவரிடம் முறையிட்டுள்ளனர்... அவர் சரியான பதில் அளிக்கவில்லை என கூறி உறவினர்கள் மருத்துவமனை வாயிலில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தீபா இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்