இயந்திரங்கள் இருந்த ஸ்ட்ராங் ரூமில் மின் கசிவு - விருத்தாசலத்தில் பரபரப்பு

x

இயந்திரங்கள் இருந்த ஸ்ட்ராங் ரூமில் மின் கசிவு - விருத்தாசலத்தில் பரபரப்பு

#viruthachalam | #thanthitv

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராங் ரூமில் திடீரென மின்கசிவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு நினைவு விழா கட்டிடத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. வாக்குப்பதிவை முன்னிட்டு இயந்திரங்கள் அனைத்தும் தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு காவல்துறையினர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பணியின் போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளியின் நினைவு விழா கட்டிடத்தின் அறையில், திடீரென மின்கசிவு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் அதிகாரிகள் மற்றும் கோட்டாட்சியரும் விரைந்து சென்று கட்டிடத்திற்கான மின் இணைப்பை துண்டித்த நிலையில், பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்