காரை தட்டிசென்ற அவனியாபுரம் கார்த்திக் | 17 காளைகளை அடக்கி முதலிடம்

x

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. சீறிப்பாய்ந்த காளைகளை விரட்டி விரட்டி காளையர் அடக்க களத்தில், அனல் பறந்தது. நடைபெற்ற 10 சுற்றுகளில், 435 மாடுபிடி வீரர்களும், 785 காளைகளும் களமிறங்கின. இதில் அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக், 17 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். இதனையடுத்து அவர் சிறந்த மாடு பிடி வீரராக தேர்ந்ததெடுக்கப்பட்டு, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார், கன்றுடன் கூடிய கறவைப்பசு, பரிசுக்கோப்பை உள்ளிட்டவை அளிக்கப்பட்டது. அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் இணைந்து, பரிசினை வழங்கினர். கார்த்திக் 2022 ஆம் ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 24 காளைகளை அடக்கி முதல் இடத்தையும், கடந்தாண்டு 17 காளைகளை அடக்கி 2ம் இடத்தையும் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்