பொங்கல் பரிசு தொகுப்பு... அதிரடியாக பறந்த முக்கிய உத்தரவு

x

பொங்கல் பண்டிகையையொட்டி பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்தநிலையில், பொங்கல் பரிசு தொகுப்பினை தடையின்றி வழங்குவது குறித்தும், பொது விநியோகத் திட்டத்தில் இன்றியமையாப் பொருள்கள் விநியோகம் குறித்தும், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் சக்கரபாணி, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான தயார் நிலையையும், அதற்கான பொருட்களை கொள்முதல் செய்வது குறித்தும் ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். PADDY PROCESSING AGREEMENT மூலம், நவீன அரிசி ஆலைத் திட்டத்தினைத் துரிதப்படுத்திச் செயல்படுத்திடுமாறும், அவர் உத்தரவிட்டார்


Next Story

மேலும் செய்திகள்