"மாங்குயிலே பூங்குயிலே"..கல்லூரியில் களைகட்டிய கிராமிய நடனம்.. ஒன்றுகூடி நடனமாடி மகிழ்ச்சி

x

கோவை சூலூரில் உள்ள கலைஞர் தொழில்நுட்பக் கல்லூரியில், சமத்துவ பொங்கல் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி கலந்துகொண்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். மாணவ மாணவியர் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து, பொங்கலோ பொங்கல் என்று முழக்கமிட்டு கொண்டாடினர். விழாவில் கும்மியாட்டம், கோலாட்டம், உறியடித்தல், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை கல்லூரி மாணவர்கள் கண்டு ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்