திடீரென த*கொலை செய்த கிராம நிர்வாக அதிகாரி - சிக்கிய கடிதத்தால் வெளிவந்த மர்மம்

x

பொள்ளாச்சி அருகே, கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் ஒருவரை கைது செய்த போலீசார், பெண் கிராம உதவியாளரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் கனக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த கருப்புசாமி என்பவர், கடந்த 23-ம் தேதி பொள்ளாச்சியில் தற்கொலைக்கு முயன்ற நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கருப்புசாமி இறப்பதற்கு முன் மரண வாக்குமூலம் எழுதி கடிதத்தை மீட்டனர். அதில், கிராம உதவியாளர் சித்ரா, மாத இதழ் ஆசிரியர் மணியன் ஆகியோர் தனது தற்கொலைக்கு காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், கருப்புசாமியின் தற்கொலையில் கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் மணியனை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள சித்ராவை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்