வீட்டிற்கு சொல்லாமல் மாணவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீஸ் - போராட்டத்தில் குதித்த பெண்கள்

x

நெல்லை மாவட்டம் கீழநத்தம் தெற்கூர் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், பாளையங்கோட்டையில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். பேருந்தில் வீடு திரும்பியபோது இருதரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன்பேரில், 6 மாணவர்களை, விசாரணை என்ற பெயரில் போலீசார் அழைத்துச் சென்றனர். இதில் 2 சிறுவர்கள் 6ம் வகுப்பு படித்து வருவதால் அவர்களை விடுவித்தனர். இந்நிலையில், விசாரணைக்கு அழைத்துச் சென்ற 4 மாணவர்களை விடுவிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 4 மாணவர்களையும் மாஜிஸ்திரேட் வீட்டிற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். இதையடுத்து, நீதிபதி மாணவர்களை வீட்டிற்கு அனுப்பிவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்