பொங்கலை முன்னிட்டு ம‌ப்டியில் போலீஸ் குவிப்பு... டிஜிபி சொன்ன தகவல்

x

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும், 50 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளதால், கோயம்பேடு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பார்கள். புத்தாடை எடுப்பதற்காக, திநகர், பரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் குவிந்து வருவதால், ம‌ப்டியில் போலீசார் பணியில் ஈடுபடுவார்கள். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 4 ஆயிரத்து 900 போலீசார் ஈடுபடுவார்கள் என்றும் டிஜிபி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்