குலுங்கும் ரயிலில் குடியாட்டம் போட்ட போலீஸ் - வெளியான பரபரப்பு வீடியோ

x

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் மது போதையில் பயணிகளிடம் தகராறில் ஈடுபட்ட ஆயதப்படை காவலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லக்கூடிய பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் தென்காசியை சேர்ந்த ஆயுதப்படை காவலர் சுப்பையா பாண்டியன் என்பவர் பயணித்துள்ளார். அப்போது, மது போதையில் அவர் சக பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தகவல் கிடைத்த மதுரை ரயில்வே போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி அவர் மீது வழக்கு பதிவு செய்து எச்சரித்து அனுப்பினர். இந்த நிலையில் காவலர் மது போதையில் தகராறில் ஈடுபடும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்