NIA அலுவலகம் முன்பு குவிந்த போலீசார்..SDPI கட்சி அறிவிப்பால் பரபரப்பு

x

எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்ததையடுத்து, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு முகமை அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹரியானா மாநிலத்தில், மசூதி எரிப்பு மற்றும் முஸ்லீம்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை கண்டித்து, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு முகமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக எஸ்டிபிஐ கட்சி அறிவித்தது. இதனையடுத்து, அந்த அலுவலகம் முன்பு, இரண்டு துணை காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 15 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்