நமக்கு இது தேவையா கோபி..இன்ஸ்டாவில் காட்டிய கெத்து..போலீஸ் ஸ்டேஷனில் கூனிக் குறுகி வெத்து | Police

x

திருச்சி மாவட்டம் எட்டரை கிராமத்தை சேர்ந்த முகேஷ் என்ற இளைஞர், ஆயுதங்களை கையில் வைத்துக் கொண்டு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடைவீதியில் கையில் அரிவாளுடன் முகேஷ் நின்று கொண்டிருந்ததாகவும், மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும், பெண் ஒருவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு புகாரளித்தார். இதையடுத்து கடைவீதிக்கு விரைந்த போலீசார், அரிவாளுடன் நின்று கொண்டிருந்த முகேஷை கைது செய்தனர். இதுபோன்று ஆயுதங்களுடன் வீடியோ பதிவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்