ஏடிஎம் உள்ளே இருந்த இளைஞர்கள் - திடீரென என்ட்ரி கொடுத்த போலீஸ்

x

ஆலந்தூர் எம்.கே.என் சாலையில் உள்ள பிரபல வங்கி ஏ.டி.எம்மில் 2 இளைஞர்கள் நீண்ட நேரமாக பணம் செலுத்தி வருவதாகவும், இதனால் மற்றவர்கள் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டி உள்ளதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார், ஏடிஎம் மையத்தில் இருந்த இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். கைதான நபர்கள் கேரளவை சேர்ந்த ரஃபி, முகமது யாசின் என தெரியவந்தது. சென்னை பாரிமுனையில் உள்ள ஒரு நபர், பை நிறைய பணம் கொடுத்து, அதனை வங்கிக் கணக்கில் செலுத்தினால், 600 சம்பளம் தருவதாக் கூறியதால், பணத்தை செலுத்தியதாக தெரிவித்தனர். பின்னர் இருவரையும் போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்