முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாடிய காவல்துறையினர்

x

கோவை மாவட்டம், சூலூர் அருகே காவல்துறையினர் முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருமத்தம்பட்டி பகுதியில் வள்ளலார் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் தையல் நாயகி உள்ளிட்ட பல்வேறு காவலர்கள் இனிப்பு வகைகள், புத்தாடை உள்ளிட்டவை வழங்கி தீபாவளி கொண்டாடினர். காவலர்களின் இந்த செயலுக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்