கல்லூரி மாணவனிடம் கத்தி முனையில் திருட்டு-மின்னல் போல் செயல்பட்ட போலீஸ்-சென்னையில் பரபரப்பு சம்பவம்

x

சென்னை அமைந்தகரையை சேர்ந்த மாணவர் ஒருவர், தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் நிலையில், சம்பவத்தன்று இரவு அமைந்தகரை மாநகராட்சி அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், மாணவரை மறித்து கத்தியை காட்டி மிரட்டிய நிலையில், செல்போனை பறித்து சென்றுள்ளனர். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கொள்ளையரின் அடையாளங்கள் குறித்து மாணவரிடம் விசாரித்த நிலையில், அதனை சக காவலர்களுக்கு வாக்கி டாக்கி மூலம் பரிமாற்றம் செய்தனர். இந்நிலையில் அண்ணா நகர் ரவுண்டானா அருகே சென்ற கொள்ளையர்களை, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் துரத்தி சென்று பிடித்திருக்கின்றனர். டிபி சத்திரம் பகுதியை சேர்ந்த அப்பாஸ், இமானுவேல் மற்றும் சூளைமேட்டை சேர்ந்த பிரேம்குமார் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த இரு சக்கர வாகனம் மற்றும் 10 செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்