வீட்டில் சமைத்த உணவில் விஷம்... “குடும்பமே அழிந்திருக்கும்" - கதறும் தாய்

x

கிருஷ்ணகிரியில், சமைத்து வைத்திருந்த உணவில் விஷம் கலந்திருப்பது தெரியாமல் சாப்பிட்ட பள்ளி மாணவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஓசூர் அருகே பேடரஹள்ளி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மாதேஷ் - ஈஸ்வரி தம்பதியின் மூத்த மகள் அன்புச்செல்வி, அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டுக்கு வெளியில் திறந்த வெளியில், தாய் ஈஸ்வரி விறகு அடுப்பில் உணவு சமைத்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த மாணவி சமைத்த உணவை சாப்பிட்டுள்ளார். அந்த உணவில் விஷம் கலந்ததாக சொல்லப்படுகிறது. உணவை சாப்பிட்ட மாணவிக்கு சிறிது நேரத்தில், வாந்தி மற்றும் தொண்டை எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் கூறவே, உணவில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தேன்கனிக்கோட்டையில், மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உணவு மாதிரியை எடுத்து ரசாயன ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஷம் கலந்திருப்பது தெரியாமல் உணவை சாப்பிட்டிருந்தால், தங்கள் குடும்பமே இருந்திருக்காது என தாய் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்